மண்டல பூஜைக்கு சபரிமலையில் குவியும் பக்தர்கள்....


சபரிமலையில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரி மலையில் குவிந்தவண்ணம் உள்ளனர். 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் 26-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு களபாபிஷேகம் நடைபெறுகிது. பகல் 11.40 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் பிரசித்திபெற்ற மண்டல பூஜைகள் நடைபெறும். மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மண்டல பூஜை நெருங்கு வதால் சபரிமலையில் பக்தர் கள் கூட்டம் அலைமோது கிறது. இதனால் மரக்கூட்டம் வரை பக்தர்கள் வரிசை காணப்படுகிறது. 12 மணி நேரம் காத்திருந்த பிறகுதான் அவர்களால் சுவாமி ஐயப் பனை தரிசனம் செய்ய முடிகிறது.



Leave a Comment