பிறக்குது மார்கழி மாதம்


மார்கழி மாத பிறப்பையொட்டி டிசம்பர் 16 ஆம் தேதி முதல் திருப்பதி கோவில் உள்பட 195 கோவில்களில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது. திருப்பதி கோவிலில் தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடக்கிறது. ஆனால் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடப்படுகிறது. நாளை சனிக்கிழமை மார்கழி மாதம் பிறப்பதால் திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை நிகழ்ச்சி தொடங்குகிறது. ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை நடை பெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை வேத விற்பன்னர்களைக் கொண்டு திருப்பாவை பாடப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பணட்டில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், வரதராஜ சுவாமி கோவில் உள்பட 195 கோவில்களில் திருப்பாவை நிகழச்சி நடைபெறுகிறது.



Leave a Comment