திருச்செந்தூரில் மார்கழி மாத நடைதிறப்பு நேரம் மாற்றம்!


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில், மார்கழி மாத நடைத்திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி மாதம், வரும் 16-ம் தேதி தொடங்கி 2018 ஜனவரி 13-ல் நிறைவடைகிறது. மார்கழி மாதத்துக்கான பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்த தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 முதல் 7 மணிக்குள் காலசந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிக்கால தீபாராதனை, பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணி முதல் 7 மணிக்குள் ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று, திருக்கோயில் நடை திருக்காப்பிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment