திருப்பதி புத்தாண்டு தரிசனத்திற்கான முன்பதிவு தொடங்கியது....


வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான முன் பதிவு தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசி மற்றும் ஜனவரி 1ந் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. வைகுண்ட ஏகாதசி, துவாதசி தினங்களான டிசம்பர் 29, 30 ஆம் தேதிகள் மற்றும் ஜனவரி ஒன்றாம் தேதிகளுக்கான தரிசன டிக்கெட்டுகளை, திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், அதாவது www.ttdsevaonline.com என்ற இணையதள முகவரியில், பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசி அன்று இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். துவாதசியன்று 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசனத்துக்கு ஐந்தாயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன் முன்பதிவுக்காக வெளியிடப்பட்டுள்ளது.



Leave a Comment