கோவில் பிரசாதத்தின் தத்துவம்!


கோயிலுக்குக் கொண்டு செல்லப்படும் எல்லாப் பொருட்களும் வழிபாடு முடிந்து இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன. நிவேதனம் செய்தவுடன் அந்தப் பொருட்கள் பிரசாதம் என்ற புனித நிலையை அடைகின்றன. அதுபோல எத்தகைய மாசுக்கள் படிந்த மனிதனும் தன்னை மனப்பூர்வமாக இறைவனுக்கு ஒப்படைத்து விட்டால் புனிதனாகி விடலாம் என்பதையே பிரசாதம் குறிக்கிறது.

கோயில்களில் அபிஷேக ஆராதணை முடிந்தபிறகு 16 வகை உபசாரங்கள் செய்யப்படுகின்றன. பொதுவாக வீட்டிற்கு வரும் விருந்தினரை நாம் உபசரிக்கிறோம். அவர்களுக்கு வேண்டியதைத் தந்து மரியாதை செலுத்துகிறோம். நமது உபசரிப்புக்கு மகிழ்ந்து அவர்கள் நம்மை வாழ்த்திவட்டுச் செல்கின்றனர். இந்த அடிப்படையில்தான் இறைவனுக்கு 16 வகையில் உபசாரங்கள் செய்யப்படுகின்றன. நமது உபசாரங்களுக்கு மகிழ்ந்து இறைவன் அருள்புரிகிறான்.



Leave a Comment