திருப்பதியில் மே, ஜூன் மாதங்களில் தரிசனம் செய்ய...


திருப்பதி திருமலையில் ஏழுமலையானை மே, ஜூன் மாதங்களில் தரிசனம் செய்ய ஈரோட்டில் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஈரோடு, பெருந்துறை சாலை, கிளப் மெலாஞ்ச் வளாகத்தில் உள்ள ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் மூலம் திருப்பதி தேவஸ்தான தரிசன அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில், வரும் மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கான திருப்பதி ஏழுமலையான் தரிசன அனுமதிச் சீட்டு, தங்கும் விடுதி வசதி ஆகியவற்றுக்கான முன்பதிவு செய்யும் பணி தொடங்கியது. பக்தர்கள் விடுமுறை நாள்களில் அதிக அளவில் திரள்வதால் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையொட்டி , கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களும் இந்த முன்பதிவு தரிசன அனுமதிச் சீட்டுடன் பதிவு செய்து கொள்ளலாம்.



Leave a Comment