சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா...


திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 11-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11-ஆம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெறுகின்றன. காலை 6.45மணியில் இருந்து 8.15 மணிக்குள் காப்பு கட்டப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. கோயில் ஊழியர்கள், ஊர் பிரமுகர்கள் பூக்களை தட்டுகள், கூடைகளில் எடுத்து, ஊர்வலமாக சென்று அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்கின்றனர். வெளியூர், வெளி மாவட்ட பக்தர்கள் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்ய உள்ளனர்.
இந்த தேவஸ்தான பூச்சொரிதல் விழா முதல் வார பூச்சொரிதல் விழாவாகும். அன்றைய தினம் அம்மன் உலக நன்மைக்காக பச்சை பட்டினி விரதத்தை தொடங்குவார். அதேபோல், பக்தர்களும் மஞ்சள் ஆடை உடுத்தி விரதத்தை தொடங்குவார்கள். பங்குனி மாதம் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை வரை விரத்தை கடைபிடிப்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 4-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.



Leave a Comment