திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் .....


திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் மற்றும் நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி,
ஆகஸ்டு 17 ஆம் தேதி மாலை 4.48 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுதினம் 18 ஆம் தேதி மாலை 3.53 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



Leave a Comment