ஆடியில் சதுரகிரி மலைக்கு செல்ல உகந்த நாட்கள்


ஆடி அமாவசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், நவராத்திரி, மகாசிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறும். இதில் ஆடி அமாவாசை பிரசித்த பெற்ற திருவிழாவாகும். ஆடி அமாவாசை தினத்தன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வர்.

சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு சயாட்சை பூஜை, இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும்.

இதனை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை சதுரகிரி மலைக்கு சென்றுவர பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி சதுரகிரி அடிவார பகுதியான அடிப்படை வசதிகளை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பு பணியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த போலீசாரும், மதுரை மாவட்ட போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வனத்துறை, தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.



Leave a Comment